செவ்வாய், 24 பிப்ரவரி, 2009

இன அழிப்பு வழக்கை நடத்துவதற்கு நிதி உதவி செய்ய‌

அமெரிக்காவின் குடிமகன் கோத்தபாய ராஜபக்ச என்ற இலங்கை பயங்கரவாத அரசின் பாதுகாப்புச் செயலாளர் ,அமெரிக்காவில் நிரந்தர வசிப்புரிமை பெற்ற இலங்கை இராணுவத் தளபதி சரத் பொன்சேகா. இவர்கள் இருவர் மீதும்,ஒரு குற்றப் பத்திரிகையை, அமெரிக்கத் தலைமை நீதிபதியிடம் "இனப்படுகொலைக்கெதிரான தமிழர்கள்"(Tamils Against Genocide, TAG) என்ற அமைப்பு தாக்கல் செய்துள்ளது.

இந்த வழக்கை இந்த அமைப்பின் வழக்கறிஞரும், அமெரிக்காவின் புகழ்பெற்ற வழக்கறிஞருமான புரூஸ் பெயின் தொடர்ந்து உள்ளார்.

எங்குமே பாதுகாப்பற்ற கொலைவலயங்களே சிங்களத்தால் உருவாக்கப்பட்டிருக்கிறது.

நாள் தோரும் அப்பாவி பொது மக்கள் கொல்லப்பட்டுக் கொண்டு இருக்கிறார்கள்.சராசரியாக 15 முதல் 20 பேர் வரை இனப்படுகொலை செய்யப்படுகிறார்கள்.

இன அழிப்பு வழக்கை நடத்துவதற்கு நிதி உதவி செய்ய‌ விரும்பும் நம் உறவுகள் கீழ்க்கண்ட இணைய பக்கத்திற்கு சென்று உதவுங்கள்.

https://www.tamilsagainstgenocide.org/Donate.aspx

எப்போது எரிகணை வந்து விழுமோ என்ற அச்சத்திலும்,சரியான உணவு மற்றும் மருந்து பொருள்கள் இல்லாத காரணத்தாலும் நாள் தோறும் நம் மக்கள் படுகின்ற அவலம் பார்க்க முடியாததாக இருக்கிறது.

இந்த நெருக்கடியான சூழ்நிலையில் நாம் அனைவரும் ஒன்று சேர்ந்து உதவ வேண்டிய கால கட்டத்தில் இருக்கிறோம்.

நம்மால் முடிந்த உதவிகளை தாரளமாக செய்வோம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக