வியாழன், 13 அக்டோபர், 2011

மண்ணுக்கான விடுதலை அல்ல... மக்களுக்கான விடுதலையே தேவை! - தோழர் கொளத்தூர் மணி.


இன வெறி, சாதி வெறி இரண்டுக்கும் எதிரான போராட்டங்களின் குறியீட்டுப் பெயர்தான் கொளத்தூர் மணி. உள்ளூர்ச் சேரிகளில் தீண்டாமை திணிக்கப்பட்டு, ஒதுக்கப்பட்ட தமிழர்களுக்கும் ஈழத்து முள்வேலிகளில் அடைக்கப்பட்ட தமிழர்களுக்கும் சற்றும் சமரசம் இன்றிக் குரல் கொடுப்பவர். மூன்று தமிழர்களின் உயிர் காக்க மரண தண்டனை எதிர்ப்புப் பிரசாரப் பயணத்தில் இருந்தவரைச் சந்தித்தேன்.

''நீங்கள் பெரியார் கொள்கைகள்பால் எப்படி ஈர்க்கப்பட்டீர்கள்?''

''கொளத்தூர் நிர்மலா உயர்நிலைப் பள்ளியில் படித்துக்கொண்டு இருந்தபோது, புலவர் வ.வேணுகோபால் என்ற தமிழ் ஆசிரியர்தான் எனக்கு முதன்முதலில் பகுத்தறிவுச் சிந்தனைகளை அறிமுகப்படுத்தினார். வகுப்பறையில் புராணக் கதைகள் குறித்து அவ்வப்போது விமர்சனங்களை முன் வைப்பார். 'புராணம் என்றால் பழமை, நவீனம் என்றால் புதுமை. புராணக் கதை என்றால் பழைய பொய்’ என்று சொன்ன அவர், 'விடுதலையில் தீபாவளிபற்றி ஒரு கதை வந்திருக்கிறது. படியுங்கள்’ என்றார். அப்போதுதான் முதல்முதலாக விடுதலை இதழைப் படித்தேன். கொஞ்சம் கொஞ்ச மாகப் பெரியாரின் கருத்துகள் என்னை ஈர்த்தன. 1962-ல் அப்போதைய மக்கள வைத் தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளரை ஆதரித்துப் பேசுவதற்காக பெரியார் எங்கள் ஊருக்கு வந்தார். அப்போது பெரியாரின் பேச்சை முழுமையாக உள் வாங்கிக்கொண்டேன் என்று சொல்ல முடியாது. 1971-ல் கொளத்தூரில் பெரியாரை வைத்து பொதுக் கூட்டம் நடத்தியதில் இருந்து என் இயக்கச் செயல்பாடுகள் தொடங்கின.''

''ஒரு பெரியாரிஸ்ட் என்ற முறையில் இன்றைய சூழலில் பெரியாரிடம் இருந்து கற்றுக்கொள்ள வேண்டியவை, விட்டுவிட வேண்டியவை என்று எவற்றைக் கருதுகிறீர்கள்?''

''சாதி ஒழிப்பும் பெண் விடுதலையும்தான் பெரியார் கொள்கைகளின் அடித்தளம். அவரது கடவுள் மறுப்பும் தனித் தமிழ்நாடு கோரிக்கையும்கூட, சாதி ஒழிப்புக் கொள்கை யின் நீட்சிதான். நான் மட்டும் அல்ல, இந்த மானிட சமுதாயமே பெரியாரிடம் இருந்து கற்றுக்கொள்ள வேண்டியது சுய மரியாதையையும் சமத்துவத்தையும்தான். பெரியாரிடம் இருந்து விட்டுவிட வேண்டியது என்று எதுவும் இல்லை. ஆனால், பெரியார் இறந்து 38 ஆண்டுகள் ஆகிவிட்டன. சுற்றுச்சூழல் பாதுகாப்பு, அணு உலை எதிர்ப்பு போன்ற விஷயங்கள் பெரியார் காலத்தில் இல்லை. இப்போது அதை எல்லாம் சேர்த்துப் பேச வேண்டும். மேலும், உலகின் தலைசிறந்த பெண் விடுதலைக் கருத்துகளைச் சொன்னவர் பெரியார். இப்போது பெண் விடுதலை என்பதைத் தாண்டி திருநங்கைகளின் உரிமைபற்றிப் பேசப்படுகிறது. அதேபோல், ஒருகாலத்தில் 'எதை முதன்மைப்படுத்துவது சாதியையா... வர்க்கத்தையா?’ என்கிற கருத்துப் போராட் டம் பெரியார் இயக்கத்துக்கும் கம்யூனிஸ்ட் டுகளுக்கும் இடையே இருந்துவந்தது. ஆனால், சில பத்தாண்டுகளாக கம்யூ னிஸ்ட்டுகள் இந்துத்துவ எதிர்ப்பை முன் வைக்கிறார்கள்; தீண்டாமைப் பிரச்னை களைக் கையில் எடுத்துப் போராடுகிறார் கள். இது பெரியாரியலுக்குக் கிடைத்த வெற்றி. ஆனால், கம்யூனிஸ்ட்டுகள் எப்படி சாதிப் பிரச்னைகளைக் கணக்கில் எடுத்துக்கொள்ளத் தவறினார்களோ, அதேபோல பெரியாருக்குப் பின் பெரியார் இயக்கங்கள் பொதுவுடைமையை அழுத்தமாகப் பேசவில்லை. இன்றைய உலகமயமாக்கச் சூழலில் 'பார்ப்பன - இந்திய தேசிய - பன்னாட்டு கூட்டுக் கொள்ளை எதிர்ப்பு’ என்ற முழக்கத்தை நாங்கள் முன்வைக்கிறோம்.''

'' 'திராவிட அரசியல்தான் இன்றைய பல வீழ்ச்சிகளுக்குக் காரணம். திராவிடம் என்பதே மாயை’ என்று தொடர்ச்சியாக தமிழ் தேசியவாதிகள் பேசிவருகிறார்களே... இன்னும் திராவிட அடையாளத்தைச் சுமக்கத்தான் வேண்டுமா?''

''போதிய புரிதல் இல்லாதவர்கள்தான் அப்படிப் பேசிவருகிறார்கள். மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்ட பிறகு, பெரியார் சாகும் வரை 'தமிழ்நாடு தமிழருக்கே’ என்று தனித் தமிழ்நாடு கோரிக்கையைத்தான் முன்வைத்தாரே தவிர, மலையாளிகள், தெலுங்கர்கள், கன்னடர்களைச் சேர்த்து திராவிட நாடு விடுதலையை முன்வைக்கவில்லை. திராவிடம் என்பது ஏதோ நிலப்பரப்புக்கான அடையாளம் இல்லை. அது இந்துத்துவ எதிர்ப்பின் குறியீட்டுச் சொல். நாங்களும் தனித் தமிழ்நாடு கேட்கிறோம், தமிழ் தேசியவாதிகளும் தனித் தமிழ்நாடு கேட்கிறார்கள். ஆனால், அவர்கள் வெறுமனே மண்ணுக்கான விடுதலையை முன்வைக்கிறார்கள். நாங்கள் மக்களுக்கான விடுதலையை முன்வைக்கிறோம். 'திராவிடர்’ என்ற சொல், பார்ப்பனர் அல்லாத மக்கள் என்ற பொருளில்தான் பெரியாரால் பயன்படுத்தப்பட்டது. திராவிட அரசியல் கட்சிகளின் மீது உள்ள வெறுப்பால் பலர் 'திராவிடம் என்பதே மாயை’ என்று பேசிவருகிறார்கள். உண்மையில் திராவிட அரசியல் கட்சிகளான தி.மு.க., அ.தி.மு.க., ம.தி.மு.க.கூட தமிழர்களிடத்தில்தான் அரசியல் செய்கின்றனவே தவிர, மலையாளி கள், தெலுங்கர்கள், கன்னடர்களிடத்தில் அல்ல. மேலும், சாதி ஒழிப்பு, தாழ்த்தப் பட்டோர் விடுதலை, பார்ப்பன எதிர்ப்பு, இந்துத்துவ எதிர்ப்பு, இந்திய தேசிய எதிர்ப்பு, பெண் விடுதலை... இவை எல்லாம் சேர்ந்ததுதான் பெரியார் முன்வைத்த திராவிட அரசியல். இன்றைய திராவிட அரசியல் கட்சிகள், இவை எதையும் முன்வைப்பது இல்லை. எனவே, திராவிட அரசியல் கட்சிகளை முன்வைத்து திராவிடம் என்கிற கருத்தாக்கத்தையே மறுப்பது அறியாமை.''

''தொடர்ச்சியாக தீண்டாமைக்கு எதிரான போராட்டங்களை முன்னெடுக்கிறீர்கள். ஆனால், 'பெரியார் கேரளாவில் நடத்திய வைக்கம் போராட்டம் தவிர, தமிழகத்தில் தீண்டாமைப் பிரச்னைகளுக்கு எதிரான போராட்டங்களை முன்னெடுத்தது இல்லை’ என்ற குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகின்றதே?''

''தீண்டாமை ஒழிய வேண்டும் என்றால், சாதி ஒழிய வேண்டும்; சாதி ஒழிய வேண்டும் என்றால், இந்து மதம் ஒழிய வேண்டும். இதுதான் பெரியாரின் அடிப்படைக் கொள்கை. இதற்காகத்தான் அவர் வாழ்நாள் முழுக்கப் பாடுபட்டார். சுய மரியாதை இயக்கத்தின் சார்பாக ஏராளமான ஆதி திராவிடர் சுய மரியாதை மாநாடுகளையும் ஆதிதிராவிடர் கிறிஸ்தவர் சுய மரியாதை மாநாடுகளையும் நடத்தினார். முதுகுளத் தூர் கலவரத்தின்போது, தாழ்த்தப்பட்ட மக்களின் பக்கம் நின்று, 'கலவரத்துக்குக் காரணமான பசும்பொன் முத்துராமலிங் கரைக் கைதுசெய்ய வேண்டும்’ என்று உறுதியாக வலியுறுத்தியதும் பெரியார் தான்.

மயிலாடுதுறை அருகே உள்ள காளி மற்றும் மாதிரிமங்கலம் ஆகிய ஊர்களில் 'சாதித் தொழிலைச் செய்ய மாட்டோம்’ என்று தாழ்த்தப்பட்ட மக்கள் நடத்திய பறை தப்பட்டையை எரிக்கும் போராட்டம், காங்கிரஸ் மாநாட்டில் தாழ்த்தப்பட்டவர் களுக்கு அனுமதி மறுக்கப்பட்டதை எதிர்த்து நடத்தப்பட்ட போராட்டம் என்று ஏராளமான போராட்டங்களைப் பெரியார் இயக்கம் நடத்தி உள்ளது. ஆனால், அவை எல்லாம் பெரிதாக ஆவணப்படுத்தப்படாததுதான் வரலாற்றுத் துயரம். 1926-ல் சிராவயல் என்ற ஊரில் தாழ்த்தப்பட்டவர்களுக்கு தனிக் கிணறு அமைக்கப்பட்டு, அதைத் திறப்பதற்காகப் பெரியார் அழைக்கப்பட்டார். ஆனால், 'பொதுக் கிணறுக்காகப் போராடுங்கள். தாகத்தால் செத்துப்போகலாமே தவிர, தனிக் கிணறு அமைப்பது தீர்வு அல்ல’ என்று பெரியார் மறுத்துவிட்டார். 'பறையன் பட்டம் போகாமல் சூத்திரன் பட்டம் போகாது’ என்று யார் தீண்டாமையை மேற்கொள்கிறார்களோ, அந்த பிற்படுத்தப்பட்டவர் களிடம் பெரியார் பேசினார். அதுதான் புரட்சி.''

''பேரறிவாளன், முருகன், சாந்தன் ஆகியோரின் மரண தண்டனையை ரத்துசெய்ய வேண்டும். ராஜபக்ஷேவைப் போர்க் குற்றவாளியாக அறிவிக்க வேண்டும் என்று ஜெயலலிதா சட்டமன்றத்தில் தீர்மானங்கள் நிறைவேற்றிய பிறகு, ஈழ ஆதர வாளர்கள் சமச்சீர்க் கல்வி, பரமக்குடி துப்பாக்கிச்சூடு, நரேந்திர மோடி உண்ணாவிரதத்துக்கு ஆதரவு போன்ற விஷயங்களில் ஜெயலலிதாவைக் கடுமை யாக விமர்சிப்பது இல்லையே?''

''ஈழ ஆதரவாளர்களில் பலர் சாதி ஒழிப்பு, சிறுபான்மையினர் உரிமைகள், சுற்றுச்சூழல் பிரச்னை, மனித உரிமைகள் ஆகியவற்றில் கவனம் செலுத்தாத போக்கு இருக்கிறது. அதே நேரத்தில், காஷ்மீர், தண்டகாரண்யம், சல்வாஜூடும்பற்றிப் பேசும் பலர் ஈழப் பிரச்னைபற்றிக் கவலைப் படுவது இல்லை. இரண்டு தரப்பிலும் போதாமைகள் இருக்கின்றன. இவை சரி செய்யப்பட வேண்டும்.''

''பிரபாகரன் உயிரோடு இருக்கிறாரா? ஈழத் தமிழர்களின் பிரச்னைகளைத் தீர்க்க என்ன மாதிரியான தீர்வுகளை முன்வைக்கிறீர்கள்?''

''பிரபாகரன் உயிரோடு இருக்க வேண்டும் என்று விரும்புகிறோம். ஆனால், உயிரோடு இருக்கிறாரா என்பது தெரியாது. இன்றைய சூழலில், ராஜபக்ஷேயின் போர்க் குற்றங்கள் விசாரிக்கப்பட வேண்டும் என்கிற கோரிக்கை வலுவாக முன்வைக்கப்படு கிறது. ஆனால், ராஜபக்ஷே மட்டுமே இனப் படுகொலையில் ஈடுபடவில்லை. எல்லா இலங்கை அதிபர்களுமே தமிழர்களுக்கு எதிராக இனப் படுகொலையில் ஈடுபட்டவர்கள்தான். உயிரோடு உள்ள எல்லா இலங்கை அதிபர்களுமே போர்க் குற்றங்களின் அடிப்படையில் தண்டிக்கப்பட வேண்டியவர்கள்தான். ஈழப் பிரச்னைக்கான தீர்வு தமிழீழம்தான் என்று கருதுகிறோம். அந்த மக்களின் விருப்பமும் அதுதான் என்று உறுதியாக நம்புகிறோம்!''
நன்றி :- ஆனந்த விகடன்.

திங்கள், 10 அக்டோபர், 2011

"கோமாதா எங்கள் குலமாதா''


மாட்டுக்கறி என்றால் எங்களுக்கு அவ்வளவு இஷ்டம். உயிர்! அதற்காக எதையும் செய்யதுணிந்திருக்கிறோம். என்னது மாட்டுக்கறியா... உவ்வ்வ்வ்வே! என்பவர்கள் உடனடியாக விண்டோவை மூடி வைத்துவிட்டு ஓடிடுங்க!

ஆனால் பாருங்க பாஸ்... உவ்வே என்று ஓடுகிற அளவுக்கு மாட்டுக்கறியொன்றும் மோசமான உணவு கிடையாது. சொல்லப்போனால் அசைவ உணவுகளில் சுவை மற்றும் உடல்நலம் முதலிய காரணிகளின் அடிப்படையில் சிறந்தது மாட்டுக்கறிதான். அப்போது எங்களுக்கு வயது ஏழோ எட்டோதான். மாட்டுக்கறியை மென்றுதின்ன சரியாக பற்கள் கூட முளைத்திருக்காது! ஓட்டை பாக்கெட்டில் காசுமிருக்காது.

எங்களுக்கு பிரியாணி என்பதே பெருங்கனவு. அதிலும் சிக்கன் பிரியாணியெல்லாம் கொடுங்கனவு. அந்த சமயத்தில் மாட்டுக்கறி பிரியாணிதான் சீஃப் அன் பெஸ்ட். ஒரு கப்பு வெறும் பத்துரூபாய்தான்! நாங்கள் அதில் அரைக்கப்பு சாப்பிடுவோம். மாட்டுக்கறியுடனான எங்கள் முதல் உறவு அப்படித்தான் தொடங்கியது.

சீஃப் அண்ட் பெஸ்ட் என்ற பெயரிலேயே கோவை கோட்டைமேட்டில் ஒரு புலால் உணவகமிருந்தது. கோட்டைமேட்டில் இருக்கிற மாநாகராட்சி ஆரம்பப்பள்ளிக்கு நேர் எதிரில்.. மிக மிக அருகில். இப்போது அந்தக்கடையை மூடிவிட்டனர். பிரியாணிக்கு மசாலா அரைக்கும் போதே வயிற்றுக்குள் பட்டாம்பூச்சி பறக்கும்! பள்ளிக்கோடம் பக்கம் போகும்போதெல்லாம் நாவில் நீர் சொட்டும். அப்படி ஒரு மணம். அதிலும் மாட்டுக்கறியின் வாசமிருக்கிறதே சொல்லவும் வேண்டாம்.. ஆஹா!

கோட்டைமேட்டுக்கென்று ஒரு பிரத்யேக வாசனை இருந்தது. அது மாட்டுக்கறியின் மணம். எங்கும் நிறைந்திருக்கும். மாட்டுக்கறியினை வேகவைக்கும்போது அதிலிருக்கிற அதிகப்படியான கொழுப்பு நீருக்கு மேல் ஒரு படலமாக எண்ணெயைப்போல மிதப்பதை காணலாம். அதன் மணம் வெண்ணையை உருக்கும் போது உண்டாகுமே அதைப்போலவே இருக்கும். ஏனோ அந்த மணம் ஏற்காமல் சைவபட்சினிகள் வாந்தி எடுத்துவிடுவதை பார்த்திருக்கிறேன். வெண்ணை காய்ச்சும்போது வருகிற துர்நாற்றம் இதைவிடவும் மோசமானது!

அஜ்மீர் பிரியாணி ஹோட்டல்தான் பீஃப் பிரியாணிக்கு கோவை ஃபேமஸ். இரவு ஒருமணிக்குப்போய் கேட்டாலும் சுடச்சுட சூடு குறையாமல் பிரியாணி போடுவதை பார்த்திருக்கிறேன். ஒரே குறை அந்தக்கடையில் பீஃப் என்று கேட்டால் கோச்சிப்பாங்க! மட்டன் என்றே கேட்க வேண்டும். அதைப்பின்பற்றி கோவையின் மற்ற பீஃப் கடைகளும் மாட்டுக்கறியை மட்டன் என்றே அழைத்தனர். ஒரு கப் பிரியாணியில் ஐந்தாறு நல்ல பீஸாவது நிச்சயமாக இருக்கும். பீஸ் என்றால் ஏனோ தானோ ச்சவ ச்சவ பீஸ்கள் அல்ல! நல்ல வெந்த மிருதுவான கையால் பிட்டுப்பார்த்தால் அப்படியே கரைகிற அற்புதபீஸ்கள் அவை. மாட்டுக்கறியின் சுவையே அது வேகும் பதத்தில்தான் இருக்கிறது.

சிக்கன் பிரியாணியில் பெரிய பெரிய பீஸ்கள் போட்டு சமைப்பதை பார்த்திருப்போம். மாட்டுக்கறிக்கு அப்படி சமைத்தால் கரக் மொறுக் என ரப்பர் துண்டுகளை போட்டு பிரியாணி சமைத்தது போலவேதான் இருந்துதொலைக்கும். அதனால் சின்ன சின்னத்துண்டுகளாக போட்டு சமைப்பதென்பது பீஃப் பிரியாணி சமையலில் அடிப்படை. மட்டனுக்கும் பன்றிக்கறிக்கும் கூட இது பொருந்தும்.

என் நண்பர்கள் வீடுகளில் மட்டுமே பீஃப் குழம்பு, பீஃப் சுக்காவெல்லாம் கிடைக்கும். கடைகளில் சில்லி பீஃப் என்று ஒன்று கிடைத்தாலும் சுவையேயில்லாத அந்த கொடிய வஸ்துவை குடிக்கும் போது மட்டுமே வேறு வழியின்றி உபயோகிக்கவியலும்.. அதுவும் சென்னையில் சில இடங்களில் கிடைக்கிற பீஃப் ரைஸெல்லாம் மாட்டுக்கறிக்கே அவமானம்.
வார இறுதியில் கிரிக்கெட் ஆடிவிட்டு , களைத்துப்போன எங்களுக்கு ஊக்கமருந்தாக இருந்தது மாட்டுக்கறிதான். போதிய ஊட்டச்சத்தின்றி சோம்பிப்போய் திரிந்த எங்களுக்கு புரத சத்தினை தந்த வள்ளல் அது. அஜ்மீர் பிரியாணி மற்றகடைகளைவிடவும் ஐந்துரூபாய் விலை அதிகம். ஐந்து ரூபாய் புரட்டுவது பெரும்பாடு அதனால் அஜ்மீருக்கு மாற்றாக இன்னொரு கடையை தேடிய போது அகப்பட்டதுதான் முத்துராவுத்தர் கடை. அஜ்மீருக்கு சற்றும் குறையாத அருமையான சூடான பிரியாணி இங்கே இப்போதும் கிடைக்கிறது. மதியம் மூன்று முப்பதுக்குப்போனால் முதல் ஆளாக அப்போதுதான் சமைத்த சூடான பிரியாணி கிடைக்கும். ஒன்றிரண்டு ரப்பர் துண்டுகளிலிருந்தாலும் நல்ல பீஸ்களும் கிடைக்கும். விலையும் மலிவு (ஐந்துரூபா கம்மி).

கோவையைவிட்டு சென்னை வந்த சிலநாட்களிலேயே தெரிந்துவிட்டது. மாட்டுக்கறிக்கும் சென்னை நகருக்கும் ஆகாதென்பது. எங்கு பார்த்தாலும் சிக் சிக்கென்று ஒரே சிக்கன்கறியும் பிரியாணியும். அடச்சே! என்றாகிவிட்டது. நண்பர்கள் இல்லாத மாட்டுக்கறியில்லாத நாட்கள் நரகமாயிருந்தன.

ஆனால் பீஃப் தாகம் மட்டும் தணியவேயில்லை. நண்பர்களோடு இணைந்து சாலைகளெங்கும் அலைந்து திரிந்து மாட்டுக்கறி வாங்கி வந்து வீட்டிலேயே சமைப்போம். வீட்டில் சமைப்பதில் இருக்கிற பெருங்குறை இந்த மாட்டுக்கறியை வேகவைப்பதுதான். அதற்கு கூகிளில் ஆராய்ச்சி செய்து நாங்கள் கண்டுபிடித்த நுணுக்கமான வழி வொய்ன் கலந்து சமைப்பது. அது மாட்டுக்கறியின் சுவையை கூட்டுவதோடல்லாமல் சீக்கிரமே நல்ல பதமாக வேகவும் உதவுகிறது. அதாவது ஒன்றரை மணிநேரம் வேகவேண்டிய கறியினை வெறும் அரைமணிநேரத்தில் வேகவைத்துவிடும்.

முதலில் கறியைவாங்கி சுத்தம் செய்து , நன்கு கழுவி சிறுசிறு துண்டுகளாக வெட்டி வொயினில் போட்டு ஊறவைக்க வேண்டும் பிறகு அதை அப்படியே கொதிக்கும் நீரில் போட்டு வேகவைத்தால் அற்புதமான மணம் காற்றில் பரவும். அருகாமை வீடுகளுக்குள் நுழைந்து அவர்களை உங்கள் வீட்டு வாசலுக்கே அழைத்துவரும்.. சாராயம் காய்ச்சறீங்களா? என்று கேட்டிருக்கிறார்கள். இந்த மணத்தின் சுகம் அறியாத வீட்டு ஓனரிடம் ஓத்தாம்பட்டை வாங்கியிருக்கிறோம். இதற்குநடுவே நன்கு வெந்த கறியை தனியாக எடுத்து வைத்துவிட்டு வெங்காயம் இஞ்சிபூண்டு பேஸ்ட் போட்டு வதக்கி அதில் மசாலா சேர்த்து கறியையும் போட்டு கிளறி உப்புப்போட்டு தண்ணீரை வேண்டிய அளவு ஊற்றி மூடிவைத்துவிட்டால் அரைமணிநேரத்தில் நல்ல மிருதுவான மாட்டுக்கறி கிரேவி தயாராகிவிடும். அதை தின்பதற்காகவே திண்டிவனத்திலிருந்து நண்பர்கள் கூட்டம் எங்கள் அறையை மொய்க்கும்! ஃபுல்லோடு வரும் புரவலர்களை எப்போதுமே நாங்கள் தடுத்துநிறுத்தியதில்லை.

அண்மையில் கோவை சென்றிருந்த போதும் கூட முத்துராவுத்தர் கடையில்தான் நண்பர்களோடு பீஃப் பிரியாணி சாப்பிட்டேன். சுவையும் மணமும் நான்கில் ஒருபீஸ் சவசவவும் மாறவேயில்லை! விலைமட்டும் கொஞ்சம் உயர்த்தியிருந்தனர். மற்றபடி கோவைமுழுக்க நிறைய பிரான்ச்சுகள் திறந்துள்ளனர். எல்லா கடைகளிலும் நல்ல பீஃப் பிரியாணி கிடைக்கிறது. பீஃப் ரசிகர்கள் மிஸ்ப்பண்ணிவிடக்கூடாத கடைகளில் அஜ்மீர் மற்றும் முத்துராவுத்தர் பிரியாணிகள் முக்கியமானது. கோவையில் சில கடைகளில் பீஃப் பிரியாணியை பீப் பிரியாணி என எழுதிவைத்திருந்தது கோபத்தை வரவழைத்தது. இதை மாற்ற தமிழ் ஆர்வலர்கள் முயற்சிக்க வேண்டும்.

சென்னையில் இவைகளுக்கிணையான பீஃப் பிரியாணிக்கடை எங்குமே கிடையாது. நண்பர்கள் தெரிந்திருந்தால் சொல்லி உதவலாம். உதயம் தியேட்டருக்கு அருகில் ஒரு கடை கண்டுபிடித்து சில நாட்கள் அங்குதான் பீஃப் பிரியாணி சாப்பிட்டுவந்தேன். ரொம்ப சுமார்தான் என்றாலும் சக்கரையில்லாத ஊருக்கு.. என்று வேறு வழியின்று தின்றுவந்தேன். ஏனோ அந்தக்கடை சிலமாதங்களில் மூடப்பட்டது. ஆனால் இப்போதெல்லாம் பீஃப் சாப்பிட சரியான ஒரு டக்கர் கடையை பர்மா பஜாருக்கு அருகே ஒரு கண்டுபிடித்திருக்கிறோம். அங்கே பீஃப் தந்தூரி கிடைக்கிறது! எனக்குத்தெரிந்து மாட்டுக்கறியில் தந்தூரி பண்ணுகிற ஒரே கடை அதுவாகத்தான் இருக்கும். கடையென்றால் சாலையோர கடை. பர்மா பஜார் சந்துகளுக்குள் புகுந்துசென்றால் ஒரு மசூதி இருக்கும் அதன் வாசலிலேயே இந்த சாலையோர தந்தூரி கடை அமைந்திருக்கிறது. அக்கடைகுறித்து இன்னொரு பதிவில் கடை உரிமையாளரான மெகாசைஸ் தாடிபாயின் பேட்டியோடு எழுதுவோம்.

சிக்கன் தந்தூரி மட்டுமே சாப்பிட்ட எனக்கு இந்த பீஃப் தந்தூரி வித்தியசமான அனுபவத்தினை கொடுக்கிறது. பீஃப் பிரியாணி சாப்பிடமுடியாத ஏக்கத்தினை தந்தூரி தின்று போக்கிக்கொள்கிறேன். நல்ல பீஃப் பிரியாணிக்கான என் தேடல் இன்னமும் மிச்சமிருக்கிறது. அதுகுறித்து பேசவும் நிறைய இருக்கிறது. இன்னொரு முறை பேசுவோம்.
நன்றி ; தோழர் அதீசா,விமலாவித்யா,நீலவேந்தன்.

வெள்ளி, 7 அக்டோபர், 2011

உள்ளாட்சி தேர்தலில் யாருக்கு ஓட்டுப் போடவேண்டும்?(2) - பெரியார்.


''நீங்கள் ஒவ்வொரு தேர்தல் அபேட்சகர்களையும் கட்சிப் பலத்தையோ, பிரசாரப் பலத்தையோ, செல்வாக்குப் பலத்தையோ சேர்த்துப் பார்க்காமல் தனித்தனி யாய் அவர்களுக்குள்ள ஆற்றலையும், பரோபகார சிந்தையையும் கவனித்து யாரைத் தெரிந்தெடுத்தால் முனிசிபல் நிர்வாகத்தை ஒழுங்காய் நடத்தவும், பொது நன்மைக்கு உழைக்கவும் உதவுவார் என்பதை நன்கு தெரிந்து தக்க ஞானமுள்ளவர்களாகவே பார்த்து உங்களது ஓட்டைக் கொடுங்கள்.''



கோயமுத்தூர் வாக்காளர்களுக்கு ஓர் வேண்டுகோள்
(ஸ்ரீமான் ஈ.வெ.ராமசாமி நாயக்கர்)


நமது நாட்டின் அடிமைத் தன்மைக்கும், அழிவுத் தன்மைக்கும் நமது ஒற்றுமைக் குறைவுதான் காரணமாயிருப்பதென்பதை எல்லோரும் அறிந்த விஷயம். அரசாங்கத்தாரால் நமக்குக் கொடுக்கப்படும் கல்வியும் அக்கல்வி கற்றதற்காக நமக்குக் கொடுக்கப்படும் உத்தியோகமும், பதவியும், அரசாங்கத் தாரால் நமக்கு வழங்கப்பட்டதெனச் சொல்லும் இத்தேர்தல் முறைகளும் ஆகிய இம்மூன்றும் நமது ஒற்றுமையின்மைக்குப் பிறப்பிடமாயிருக்கிறது. முதலிரண்டு காரியமும் படித்தவர்களைப் பற்றிக்கொண்டு ஒற்றுமைக் குறைவும் அடிமைத் தன்மையும் அவர்களால் உண்டாக்கப்பட்டு வந்தாலும் மூன்றாவதான தேர்தல் முறைகளான ( எலக்ஷன்கள் ) படித்தவர்களோடு அல்லாமல் சாது ஜனங்களையும், வியாபாரிகளையும், பொது மக்களையும் ஒற்றுமையோடு வாழ்வதற்கில்லாமல் பிரித்து வைக்கவும், துவேஷங்களை யும், குரோதங்களையும் உண்டாக்கி கட்சிப் பிரதிகட்சிகளை ஏற்படுத்தவும் சாத்தியமாயிருக்கிறது. இக்காரணங்களால்தான் பொதுநலத்திற்கு உண்மை யாய் உழைக்கிறவர்கள் இத்தேர்தல்களை காங்கிரஸின் வேலைத் திட்டங் களில் புகவிடாமல் தள்ளிவைத்துக் கொண்டே வந்தார்கள். இப்பொழுது நியாயமாகவோ, அநியாயமாகவோ எப்படியோ காங்கிரஸிற்குள்ளாக தேர்தல் கள் வந்து புகுந்துவிட்டதாய் காங்கிரஸ்காரர்களும், பொது ஜனங் களும் எண்ணும் படியாய் ஏற்பட்டு விட்டது. அதன் காரணமாய்ப் பொது ஜனங்கள் காங்கிரஸையும், காங்கிரஸ்காரரையும் எதிர்க்கத் துணிந்து விட்டார் கள். காங்கிரஸிற்கே குறைவுண்டாகும்படியான எதிர்ப்புகள் பலமாக உண்டா வதைக் காங்கிரஸ்காரர்கள் நன்கு அறிந்திருந்துங்கூட காங்கிரஸ்காரர்கள் என்போரில் சிலர் காங்கிரஸின் முக்கிய கொள்கைகளைக் கூட லட்சியம் செய் யாமல், தேர்தல்களில் பிரவேசித்து காங்கிரஸின் பெயரால் அவற்றை நடத்தி மக்கள் ஒருவருக்கொருவர் துவேஷத்தையும், மாச்சரியத்தையும் அடை வதற்கு ஆதாரமாய் நிற்கிறார்கள். சென்னை, மதுரை முதலிய அனேக இடங் களில் இவ்விதமாக நடைபெற்று வந்தாலும் தமிழ்நாட்டுக் காங்கிரஸிற்குப் பேராதரவாயும் வழிகாட்டியாயுமிருந்து தமிழ் நாட்டிற்கே பெருமை உண்டாக் கியதென்று சொல்லப்பட்ட இக்கோயம்புத்தூர் ஜில்லாவும், இதிலுள்ள காங்கிரஸ் பிரமுகர்களும் இத்தேர்தல் சேற்றில் உலவும்படியான காலம் ஏற்பட்டுப் போய்விட்டதென்றால் என்போன்றவர் துக்கப்படாமலிருக்க முடியவில்லை. காங்கிரஸில் எனக்குள்ள பொறுப்பையும், கடமையையும் உணர்ந்து நான் இதில் பிரவேசிக்க வேண்டியதை அலட்சியம் செய்து விட்டாலும், ஒரு சாதாரண மனிதன் என்கிற முறை யிலாவது இதைக் கவனிக்காமலிருக்க முடியவில்லை. இம்மாதம் 18-ந் தேதி எனது சொந்த வேலையாய்க் கோயம்புத்தூரிற்குப் போயிருந்தேன். அங்கு நடத்தப்படும் காங்கிரஸ் தேர்தல் பிரசாரம் என் கண்களுக்கும் காதுகளுக்கும் எட்டின. காதுகளுக்கு எட்டியவைகளையெல்லாம் விட்டுவிட்டு நேரில் கண்டவற் றையும் காங்கிரஸ் நண்பர்கள் மூலமாய் நேரில் அறிந்தவற்றையும் மாத்திரம் குறிப்பிடுகிறேன். காங்கிரஸ் சுயராஜ்யக் கட்சியின் பெயரால் கோயம்புத்தூர் நகரசபைத் தேர்தலுக்கு எட்டுக் கனவான்களை நிறுத்தி உள்ளார்கள். இவர் களில் சிலரை நான் சந்திக்க நேர்ந்தது. அவர்களில் ஒருவர் தமக்குத் தீண்டாமை விலக்கு என்பதில் கொஞ்சமும் நம்பிக்கை இல்லை யென்றும், தாம் அதற்குக் கட்டுப்படமுடியாதென்றும், காங்கிரஸ்காரர்களிடம் இதைத் தெரிவித்ததாகவும், அவர்கள் அதை ஒப்புக் கொண்டுதான் தம்மை நிறுத்தி யிருக்கிறார்களென்றும், மற்றொருவர் கொள்கைகளைப்பற்றி தமக்கு அபிப் பிராயபேதம் இருப்பதைத் தெரிவித்தும் தமக்கு எப்படியும் ஜெயம் கிடைக் கும் என்கிற காரணத்தால் தம்மிடம் கையெழுத்து வாங்கியதாகவும் தெரிவித் தார். வேறொருவர் இதுவரையில் கதரே கட்டவில்லையென்றும் மேடைமீது இருக்கும்போது கூட கதர் கட்டவில்லையென்றும் ஜில்லா காங்கிரஸ் காரியதரிசியின் முன்னரே சொல்லப்பட்டது. அதைக் காரியதரிசி அவர்கள் ஒப்புக்கொண்டு, நவம்பர் மாதம் முதல் கட்டிக்கொள்ளுவதாய்ச் சொன்னா ரென்றும் அவ்வளவாவது அவர் ஒப்புக்கொண்டதைப் பெரிதாக நினைத்து தாம் அவரிடம் கையெழுத்து வாங்கியதாகவும், அதற்கும் வேறு ஆட்கள் கிடைப்பதில்லையென்றும் என்னிடம் சொல்லிக் கையெழுத்தையும் காட்டினார். இன்னுமிரண்டொரு விஷயங்களை இதில் எழுதுவதற்கு எனக்கு இஷ்டமில்லை. ஆனால் இவையெல்லாம் முனிசிபல் நிர்வாகத்தை நடத்த யோக்கியதை அற்றதென்றாவது இந்தக் கனவான்கள் முனிசிபல் நிர்வா கத்தை நடத்தத் தகுதியற்றவர்கள் என்றாவது நான் கூறவில்லை. ஆனால் இதே மாதிரி குணமுள்ளவர்களும் எந்தவிதத்திலும் இவர்களுக்குக் குறை வில்லாதவர்களுமான பல கனவான்களுக்கு விரோதமாய்ச் சில கனவான் களை மாத்திரம் தங்கள் கட்சியார் என்று சொல்லிக்கொண்டு வீண் மனக் கசப்புக்கும், மாச்சரியத்திற்கும் இடந்தரும்படியாயும், கோயம்புத்தூர் ஜில்லா வின் பிற்கால காங்கிரஸின் வாழ்விற்கும் விரோதமாய் இதுவரை எவ்வித புகாருக்கும், சந்தேகத்திற்கும் இடம் கொடுக்காத சில காங்கிரஸ் பக்தர்கள் ஏன் இப்படி செய்யவேண்டுமென்பது தான் நமது கவலை; அல்லாமல் இவ்விஷயத்தில் காங்கிரஸ்காரர்கள் சிலர் பேரில் எவ்வித உள் எண்ணத் தைக் கற்பிக்க நான் துணியாவிட்டாலும் நான் நேரில் அறிந்த மேற்படி காரியங்களைப் பொறுத்தவரையிலாவது இவை பிற்போக்கான காரிய மென்று சொல்லாமலிருக்க முடியவில்லை. இந்த நிலைமையிலும் இந்தச் சந்தர்ப்பத்திலும் கோயம்புத்தூர் காங்கிரஸ்காரர்களான என்னுடைய நண்பர் களிடமும் என்னுடன் காங்கிரஸ் வேலை செய்த எனதாப்த நண்பர்களிடமும் யான் செய்யும் வேண்டுகோள் பயனை அளிக்குமோ, அளிக்காதோ என்ற பயமிருப்பினும் பொதுஜனங்களாகிய உங்களிடம் யான் செய்து கொள்ளும் விண்ணப்பம் பிரயோஜன மற்றதென்றும், உசிதமற்றதென்றும் யான் நினைக்கவில்லை. ஆதலால் இவ் விண்ணப்பம் மூலமாய் எனது வேண்டு கோளை உங்களுக்குத் தெரிவித்துக் கொள்ளுகிறேன். அதாவது, நீங்கள் ஒவ்வொரு தேர்தல் அபேட்சகர்களையும் கட்சிப் பலத்தையோ, பிரசாரப் பலத்தையோ, செல்வாக்குப் பலத்தையோ சேர்த்துப் பார்க்காமல் தனித்தனி யாய் அவர்களுக்குள்ள ஆற்றலையும், பரோபகார சிந்தையையும் கவனித்து யாரைத் தெரிந்தெடுத்தால் முனிசிபல் நிர்வாகத்தை ஒழுங்காய் நடத்தவும், பொது நன்மைக்கு உழைக்கவும் உதவுவார் என்பதை நன்கு தெரிந்து தக்க ஞானமுள்ளவர்களாகவே பார்த்து உங்களது ஓட்டைக் கொடுங்கள். மற்ற எந்தக் காரணங்களுக்காகவும், எவரையும் விலக்காதீர்கள். காங்கிரஸின் பெயரால் நிற்பவர்கள் எல்லோரும் உண்மையான காங்கிரஸின் கொள்கைக் குக் கட்டுப்பட்டவர்கள் என்பதை நான் ஒரு நாளும் நம்ப மாட்டேன். உங்க ளையும் நம்பும்படி சொல்லமாட்டேன். காங்கிரஸின் பெயரால் நிற்காதவர்கள் எல்லோரும் தேசத்துரோகிகள் என்றோ, காங்கிரஸ் விரோதிகள் என்றோ நினைத்து விடாதீர்கள். இந்தக் காரணங்களால் மாத்திரம் எவரும் முனிசிபல் கவுன்சிலுக்குத் தகுதியுள்ளவர்கள் அல்லர் என்று நினைத்து விடாதீர்கள். இரண்டு பாகத்திலும் நல்லவர்களும், நல்லவர் அல்லாதவர்களும் இருக்கி றார்கள். பிறர் வார்த்தைகளைக் கேட்டுக் கொண்டு உங்களது ஓட்டை தப்பான வழியில் உபயோகப்படுத்தி விடாதீர்கள். எனது அபிப்பிராயத்தை இதற்கு முன்னர் அனேக காங்கிரஸ் மேடைகளிலும் கூறியிருக்கிறேன். இனிமேலும் இதையே மற்ற காங்கிரஸ் தேர்தல்களின் தகரார் உள்ள ஊர்களுக்குத் தெரியப்படுத்தப் போகிறேன்.

குடி அரசு - வேண்டுகோள் - 23.08.1925

வியாழன், 6 அக்டோபர், 2011

உள்ளாட்சி தேர்தலில் யாருக்கு ஓட்டுப் போடவேண்டும்?(1) - பெரியார்.


''முனிசிபாலிட்டிகளுக்கு கட்சிப் பிரதானம் பார்க்க வேண்டியதே இல்லை. அபேட்சகர்கள் யோக்கியர்களா என்று பார்ப்பதுதான் உங்கள் கடமை.''

''சென்னை முனிசிபல் ஓட்டர்களுக்கு எச்சரிக்கை''.
- சித்திரபுத்திரன்

சென்னை கார்ப்பரேஷனைக் கைப்பற்ற வேண்டும் என்கிற எண்ணத் தின் மேல் மகாத்மா பெயரையும் காங்கிரஸ் பெயரையும் சுயராஜ்ய கட்சியின் பெயரையும் சொல்லிக் கொண்டு சிலர் உங்களை ஏமாற்றப் பார்க்கிறார்கள்.

அதோடு மாத்திரம் நில்லாமல் தாங்கள் யோக்கியமான கட்சியைச் சேர்ந்தவர்கள் என்றும், தங்களுக்கு எதிரிடையாய் நிற்கும் அபேட்சகர்கள் யோக்கியப் பொருப்பில்லாத கட்சியைச் சேர்ந்தவர்கள் என்றும், கட்சிப் பிரசாரம் செய்து, ஒரு கட்சியார் பேரில் வெறுப்புண்டாக்கவும் பாடுபடுகிறார் கள். முனிசிபாலிட்டிகளுக்கு கட்சிப் பிரதானம் பார்க்க வேண்டியதே இல்லை. அபேட்சகர்கள் யோக்கியர்களா என்று பார்ப்பதுதான் உங்கள் கடமை. இப் பொழுது பெயருக்கு முனிசிபல் விவாதத்தில் பிரஸ்தாபிக்கப்படும் கட்சிகள் இரண்டேதான். ஒன்று பிராமணரல்லாதார் கட்சி என்று சொல்லப்படும் ஜஸ்டிஸ்கட்சி; மற்றொன்று சுயராஜ்யக் கட்சி. இவ்விரு கட்சிகளும் ஒன்றை யொன்று தூற்றிக்கொண்டு பலமான பிரசாரங்கள் நடத்தி வருகின்றன.

இரு கட்சியின் தத்துவங்களும் தேசத்திற்கு விடுதலை உண்டாக்காது. தற்கால நிலையில் கட்சிப் பேர்கள் சொல்லிக் கொள்வதாலேயே ஜனங்கள் ஏமாறக்கூடாது. சென்ற வருஷம் சென்னை முனிசிபல் தேர்தல்களில் ஜனங்கள் கட்சிப் பெயர்களைக்கேட்டு ஏமாந்துவிட்டார்களே அல்லாமல், உண்மை அறிந்து தங்கள் கடமைகளைச் செய்யவேயில்லை. ஆனாலும், அவர்கள் முன்னிருந்தவர்களைவிட என்ன சாதித்து விட்டார்கள் என்பதைத் தெரிந்து கொண்டிருப்பார்கள். காங்கிரசானது சுயராஜ்யக் கட்சியாரை முனிசி பாலிட்டியைக் கைப்பற்றும்படி ஒரு தீர்மானமும் செய்யவேயில்லை. மகாத்மாவும் கட்டளையிடவில்லை. யோக்கியர்கள் கைப்பற்ற வேண்டும் என்பதுதான் அவர் கருத்து.

இப்பொழுது காங்கிரஸ், மகாத்மா பெயரைச் சொல்லிக்கொண்டு அபேட்சகராய் நிற்கும் கனவான்களும் ஜஸ்டிஸ் கட்சி கனவான்களைவிட எவ்விதத்திலும் சிறந்தவர்களல்ல.

சுயராஜ்யக் கட்சி அபேட்சகரில் பெரும்பான்மையோர் உங்களிடம் ஓட்டுக் கேட்க வரும்போதுதான் கதர் கட்டிக்கொண்டு மகாத்மா பெயரைச் சொல்லுகிறார்கள். ஜஸ்டிஸ் கட்சியில் கதரில் நம்பிக்கை உள்ளவர்கள் கட்டுகிறார்கள். நம்பிக்கை இல்லாதவர்கள் கட்டுவதில்லை. சுயராஜ்யக் கட்சியிலும் அநேகருக்கு கதரில் நம்பிக்கையேயில்லை. அவர்கள் உங்களை ஏமாற்ற கதர் கட்டுவதேயல்லாமல், தேச nக்ஷமத்திற்கு கட்டுபவர் வெகுசிலர். அவர்களின் வெளி வேஷம்தான் இப்படியென்றால் உள் வேஷமோ, மகாத்மாவை ( இம்பீச்மெண்ட் ) குற்றவாளியாக்கி தண்டிக்கவேண்டும் என்று சொன்னவர்களும், ஸ்ரீமான் தியாகராஜ செட்டியாரை பஞ்சாப் படுகொலைக் குக் காரணமாயிருந்த டயர் என்று சொன்னவர்களும், தீண்டாமை விலக்கில் நம்பிக்கையில்லாதவரும், பிறப்பினால் தாங்கள் உயர்ந்தவர்கள் மற்றவர்கள் தாழ்ந்தவர்கள் என்கிற ஜாதி இறுமாப்புடையவர்களும், ஒத்துழையாமை ஏற்பட்டது முதல் நாளது வரை பெயரே கேள்விப்பட்டிராதவர்களும், தேச நலத்துக்குக் கூட்டமாய் தலைவர்களும் தொண்டர்களும் ஜெயிலுக்குப் போய்க்கொண்டிருந்த காலத்தில் மறைந்து கொண்டிருந்தவர்களும், “ஒரு வேளை சாப்பாடு ஒரு பிராமணக் குழந்தை ஒரு பிராமண ரல்லாத பிள்ளை கூட உட்கார்ந்து சாப்பிட்டால் ஒரு மாதத்திற்கு பட்டினி விரதம் இருப்பேன்” என்று சொன்னவரும், மகாத்மா தீண்டாமையைப் பற்றிப் பேசினால் அவரை எதிர்த்துக் கவிழ்த்துவிட வேண்டுமென்று சொன்னவரும் மற்றக் கட்சி யாரைவிட தாங்கள் யோக்கியர்களென்று சொல்லிக் கொண்டு உங்களிடம் வருகிறார்கள். சுயராஜ்யக் கட்சியிலிருக்கும் சிலர்களைவிட எத்தனையோ மடங்கு யோக்கியர்கள் மிதவாதக் கட்சியிலும் ஜஸ்டிஸ் கட்சியிலும் இருப்பதை நீங்கள் அறிந்திருப்பீர்கள்.

ஒத்துழையாமை என்கிற தத்துவம் காங்கிரஸிலிருந்து ஒழிக்கப்பட்ட பிறகு கதர், தீண்டாமை விலக்கு என்கிற இரண்டு திட்டங்களைத்தவிர மற்றபடி எந்த விதத்திலும் ஒரு கட்சிக்கு மற்றொரு கட்சி வித்தியாசப் பட்டதல்ல. இந்த இரண்டு திட்டங்களைப் பொருத்தவரை சுயராஜ்யக் கட்சியானது ஜஸ்டிஸ், மிதவாதக் கட்சியைவிட மேலானதென்று சொல்ல முடியாது.

சுயராஜ்யக் கட்சியாரின் பிடிவாதத்தால்தான் காங்கிரசும் வெளி வேஷத்திற்கு மாத்திரம் கதர் கட்டினால் போதும் என்கிறது போல் மீட்டிங்கு களுக்கு வரும்போது மாத்திரம் கதர் கட்டினாலும் அவர் காங்கிரஸ் அங்கத்தி னராகலாம் என்றும், தாங்களே ராட்டினம் சுற்றாவிட்டாலும் வேறு ஒருவர் சுற்றிய நூலைக் கொண்டாவது காங்கிரஸ் அங்கத்தினராகலாம் என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தீண்டாமை விஷயத்திலோ சுயராஜ்யக் கட்சியாரின் மனோபாவத்தை நாம் சொல்லவே வேண்டியதில்லை. குருகுல சம்பந்தமான விவகாரம் சென்னையில் மகாத்மா வந்திருந்தபொழுது அவரி டம் பிரஸ்தாபிக்கப்பட்ட சமயத்தில் நடந்த வாக்குவாதங்களால் தெரிந்திருக் கலாம். அன்றியும் ஸ்ரீமான் எம்.கே. ஆச்சாரியார் கூற்றினாலும் தெரிந்திருக் கலாம். வர்ணாசிரம தர்மக் கூட்டங்கள், பிராமணர் சங்கங்கள் இவைகளில் சுயராஜ்யக் கட்சியாரின் உள்குணத்தாலும் அறியலாம். ஆகையால் சென்னை ஓட்டர்களும், வெளி ஜில்லாக்களில் உள்ள ஓட்டர்களும் தேர்தல் காலங் களில் கட்சியின் பேரைக்கண்டு ஏமாந்து போகாமல், நிற்கும் கனவான்களின் யோக்கியதாபட்சத்தை அறிந்தும், அவர் நாட்டிற்கு என்ன செய்திருக்கிறார், என்ன செய்யக்கூடும், நாட்டை நடத்த இவர்களுக்கு எவ்வளவு பாத்தியதை உண்டு என்பதைக் கவனித்து தங்கள் ஓட்டுரிமைகளை உபயோகிப்பார் களென்று நம்புகிறேன்.

குடி அரசு - கட்டுரை - 28.06.1925

ஞாயிறு, 25 செப்டம்பர், 2011

மாவீரன் திலீபன்.


''திலீபன்''.
பார்த்திபன் இராசையா (நவம்பர் 27, 1963 - செப்டெம்பர் 26, 1987; ஊரெழு, யாழ்ப்பாணம், இலங்கை) என்ற இயற்பெயரை கொண்ட லெப்டினன் கேணல் திலீபன் தமிழீழ விடுதலைப் புலிகளின் ஒரு முக்கிய உறுப்பினராக இருந்தவர். இந்திய அமைதிப் படையினரிடம் ஐந்து கோரிக்கைகளை முன்வைத்து காந்திய வழியில் நீரும் அருந்தா உண்ணாவிரதம் இருந்து, அக்கோரிக்கைகள் நிறைவேற்றாப்படா சமயம் உறுதியுடன் அவ் உண்ணாவிரதத்தில் உயிர்துறந்தவர். இவரை இந்திய அரசு இறக்க விட்டது தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இந்திய இராணுவத்துக்குமிடையே பின்னர் ஏற்பட்ட போருக்கு ஒரு முக்கிய காரணம்.
1987 செப்டெம்பர் 15ஆம் திகதி ஐந்து அம்சக் கோரிக்கையை முன்வைத்து உண்ணாவிரதத்தை ஆரம்பித்தார். 1987ஆம் ஆண்டு செப்டெம்பர் 26ஆம் திகதி சனிக்கிழமை காலை 10.48 மணிக்கு லெப்டினன் கேணலாக, யாழ்.மாவட்ட அரசியல் துறைப் பொறுப்பாளராக இருந்த திலீபன் தியாக மரணம் எய்தினார்.

மாவீரன் திலீபன் முன் வைத்த ஐந்து அம்சக் கோரிக்கைகள் :-
1)மீளக்குடியமர்தல் என்ற பெயரில் வடக்கிலும் கிழக்கிலும் புதிதாக திட்டமிடும் குடியேற்றங்களைத் தடுத்து நிறுத்தவேண்டும்.
2)சிறைக் கூடங்களிலும் இராணுவ பொலிஸ் தடுப்பு முகாம்களிலும் தடுத்துவைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியற் கைதிகள் யாவரும் விடுதலை செய்யப்படவேண்டும்.
3)அவசரகாலச் சட்டம் முழுமையாக நீக்கப்படவேண்டும்.
4)ஊர்காவல் படையினருக்கு வழங்கப்பட்ட ஆயுதங்கள் முற்றாகக் களையப்படவேண்டும்.
5)தமிழர் பிரதேசங்களில் புதிதாக பொலிஸ் நிலையங்களைத் திறப்பதற்கு மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் முற்றாக நிறுத்தப்படவேண்டும்.
''மாவீரன் திலீபன் வீரமரணம் முழு காணொளி'',

சனி, 24 செப்டம்பர், 2011

கிராமங்கள் ஒழிய வேண்டும் - பெரியார்


கிராமம் என்பது மிக பரிதாபகரமான காக்ஷியாகும். கிராம ஜனங்கள் நிலை மிகவும் பரிதாபகரமானதாகும். பட்டணத்துக்காகவே கிராமங்கள் இருந்து வருகின்றன. கிராம சீர்திருத்தம் என்பது பட்டணங்களில் வாழ்பவர்களின் சௌகரியத்துக்கு ஆக செய்யப்படும் காரியமேயாகும். கசாப்புக் கடைக்காரன் ஆட்டைப்பற்றி கவலை கொள்ளுவது போல்தான் பட்டணக்காரன் கிராமத்தைப் பற்றி கவலை கொள்ளுவதாய் இருக்கிறது. அரசியல் தானாகட்டும், சமூக இயல் தான் ஆகட்டும் எவ்வளவுதான் முற்போக்கடைந்தாலும் கிராமக்காரனின் நிலை ஒரே மாதிரிதான். அவன் பாடுபட்டு உழைத்து வஸ்துக்களை உண்டாக்க வேண்டியதும், அதன் பலனை பட்டணக்காரன் அனுபவிப்பதுமல்லாமல் வேறு என்ன நன்மை கிராமக்காரனுக்கு இருக்கிறது? கால்நடை வளர்ப்பைப்பற்றி கிராமவாசிகளுக்கு தெரியப்படுத்த வேண்டும் என்று ஒருவர் சொன்னார், கால்நடைகள் வளர்க்கப்பட்டால் கிராமத்துக்கு என்ன லாபம்? பட்டணத்தில் இருப்பவன்தான் பால், தயிர், மோர், நெய் நன்றாக சாப்பிடுவான். கிராமத்தான் சாதத் தண்ணீர் விட்டுத்தான் சாப்பிடுவான். அதுதான் உடலுக்கு பலம் தருமென்று அவன் கற்பிக்கப்பட்டிருக்கிறான். ஒரு கிராமத்தான் குழந்தை தனக்கு கொஞ்சம் நெய்விடும்படி கேட்டால் அவன் தாய்க்கு உடனே கோபம் வந்துவிடும். "உனக்கு நெய்யை ஊற்றிவிட்டால் நாளைக்கு நெய்க்கார மாப்பிள்ளைக்கு என்ன ஊற்றுவது" என்று கேட்பாள். (நெய்க்கார மாப்பிள்ளை என்றால் கிராமங்களில் சுற்றி நெய் வாங்கிக்கொண்டு போய் பட்டணங்களில் விற்கும் நெய் வியாபாரி) இவ்வளவு சிக்கனமாக கிராமத்தார்கள் பிழைத்தும் பயன் என்ன? மீத்து வைத்த பணங்களை வக்கீல்களும், போலீஸ்களும், ரிவினியு கிரிமினல் அதிகாரிகளும் கொள்ளை அடித்துக் கொண்டு போதாக்குறைக்கு அவர்களிடம் பாண்டு எழுதிக் கொள்ளுகிறார்கள்.

கிராமவாசிகளின் சௌகரியத்தைப் பாருங்கள். அவர்களுக்கு நல்ல தண்ணீர் கிடையாது, வெளிச்சம் கிடையாது, சுகாதாரம் கிடையாது, நாடகம் கிடையாது, சினிமா கிடையாது, பார்க்கு, சிங்காரத் தோட்டம் கிடையாது. அதிகாலையில் இருட்டில் போகவேண்டும், அந்தியில் இருட்டின பிறகு வீட்டுக்கு வரவேண்டும். அவனால் அரசன், வியாபாரி, லேவாதேவிக்காரன், மற்ற உத்தியோகஸ்தர்கள் எல்லோரும் பிழைக்கிறார்கள். அப்படிப்பட்டவனுக்கு பட்டணத்தில் வசிக்கும் ஒரு கக்கூசுக்காரன், தெருக் கூட்டி, மேஸ்திரி ஆகியவர்களுக்கு இருக்கும் சௌகரியமும் இல்லை. ஜாதிமுறையில் பறையன் என்றொரு ஜாதி வருணாச்சிரம முறையில் வகுத்திருப்பது போலவே கிராமம் கிராமத்தான் என்கின்ற இரண்டும் வாழ்க்கை முறையில் கீழ்ஜாதியார்கள் போல் வகுக்கப்பட்டிருக்கின்றன.

கிராமம் என்பதாக ஒன்று ஏன் இருக்க வேண்டும் என்பது எனக்குத் தெரியவில்லை. பட்டணத்தான் சௌகரியத்துக்கு என்பதல்லாமல் மற்றபடி கிராமம் எதற்கு என்பது எனக்கு விளங்கவில்லை. இப்படிப்பட்ட கிராமங்களை எல்லாம் அழித்துவிடவேண்டும், எல்லோரையும் பட்டணங்களுக்கு போகும்படி செய்யவேண்டும். அதுதான் கிராம சீர்திருத்தம் என்பேன். "கிராமங்களுக்குப் போ" என்பது இப்போது ஜன தலைவர்கள் என்பவர்கள் உபதேசமாக இருக்கிறது. இதில் ஏதாவது நாணயம் இருக்க முடியுமா? B.A.யும், M.A.யும் கிராமத்துக்குப் போய் மக்களுக்கு என்ன செய்யமுடியும்? கூடவே காப்பி, கோக்கோ, சிகரட்டு, பீடி, கிராமபோன், ரேடியோ கொண்டுபோனால் ஒழிய அங்கு அரை நிமிஷம் B.A., M.A.க்காரன் தங்க முடியுமா? இல்லா விட்டால் தலைவலி, உடல் வலி, தூக்கம் பிடியாமை, மூளை வேலை ஓடாமை என்கின்ற வியாதி வந்துவிடாதா? B.A., M.A. படிப்புக்கும் கிராம முன்னேற்ற வேலைக்கும் ஏதாவது சம்பந்தமுண்டா. இவர்கள் கிராமத்துக்குப் போவதால் கிராமக்காரனுக்கு அதிக தொல்லையே அல்லாமல் இவனால் நல்லது என்ன ஆகக்கூடும்?

விவசாய விஷயத்தில் B.A., M.A.க்கு என்ன தெரியும்? கால்நடை விஷயத்தில் என்ன தெரியும்? சுகாதார விஷயத்தில் என்ன தெரியும்? இவன் சொன்னால் கிராமத்தான் கேட்க வேண்டாமா? அவன் புத்தி பழமையில் ஒட்டிக்கொண்டிருக்கும் போது B.A., M.A. யாருக்குச் சொல்லுவான்? சொன்னபடி கிராமத்தான் கேட்பதாயிருந்தாலும், அந்தப்படி செய்ய இருவருக்கும் பணம் முதலிய சாதன சௌகரியங்கள் எங்கே என்று பாருங்கள். கிராமங்களுக்கு போ என்பது ஒரு பித்தலாட்டமான சொல், அல்லது அர்த்தமற்ற சொல். கிராமத்தானுக்கு இருக்கும் பழமைப்பித்தும், மூடநம்பிக்கையும் ஒழிய வேண்டும்.

இன்றைய B.A., M.A.யும் மூடநம்பிக்கைக்காரனாகவே இருக்கிறான். பழமை பித்தனாகவே இருக்கிறான். பழமைப் பித்துதான் இன்று தேசியமாய் இருக்கிறது. அதை போதிப்பதிலேயே எல்லோரும் ஜனத்தலைவர்களாகி விடுகிறார்கள். இன்று கிராமப்புனருத்தாரண வேலையில் முதல் திட்டம் எல்லோரும் பனங்கருப்பட்டியும் கைக்குத்து அரிசியும் சாப்பிடவேண்டும் என்பதாகும். இதற்கு யார் ஒப்புவார்கள்? இத்தனை பேருக்கும் கைக்குத்து அரிசிக்கு எத்தனை பேர் குத்தவேண்டும்? ஆண் பிள்ளைகள் நெல் குத்துவார்களா? பெண்கள்தான் இனி நெல் குத்துவார்களா? பட்டணங் களிலுள்ள பெண்கள் முறத்தகலம் பட்டுக்கரை சீலையும், வைர நகைகளையும் பூட்டிக்கொண்டு ஆர்மோனியம், வீணை, சதுர்ப்பாட்டு, கதை காலக்ஷேபம் பழகிக்கொண்டு உல்லாசமாய் கேளிக்கையில் இருக்கும்போது கிராமத்து பெண்களை நெல்லுக்குத்தவும், கருப்பட்டி காய்ச்சவும் சொன்னால் அவர்கள் எப்படிக் கேட்பார்கள்? சில மூடங்கள் கேட்பதாகவே வைத்துக்கொண்டாலும் நாம் சொல்வது தான் யோக்கியமாகுமா?

கிராமத்தில் பிறந்ததற்கு ஆக நெல் குத்த வேண்டியதா என்று கேட்கின்றேன்.

ஒரு தோழர் கிராமக் கைத்தொழிலைப் பற்றி பேசினார். கிராமக் கைத் தொழில் என்று ஒன்று ஏன் இருக்க வேண்டும்? பட்டணத்துக்காரனுக்கு எந்திரத் தொழிலும், கிராமத்தானுக்கு கைத்தொழிலும் என்று யார் சிருஷ்டித்தார்கள்? ஏன் அப்படி சிருஷ்டிக்கவேண்டும்? ராட்டினம் சுற்றுவதும், தொடையில் கயிறு திரிப்பதும், மண்வெட்டியிலும், கோடாலியிலும், சுத்தியிலும், மண்வெட்டி, மரம் பிளந்து கல் உடைப்பதும்தான் கிராமத்தானுக்கு சொந்தமா இது தான் கிராம முன்னேற்றமா என்று கேட்கின்றேன். எவ்வித முன்னேற்ற முயற்சியும் இல்லாமல் பட்டணத்தான் எவ்வளவு கொள்ளை அடிக்கிறான். வியாபாரி, லேவாதேவிக்காரன், வக்கீல், வைத்தியன், அதிகாரி, உத்தியோகஸ்தன் ஆகியவர்களின் கொள்ளையை பாருங்கள். இதை ஒழிப்பதல்லவா கிராம முன்னேற்றமாகும். இந்தக் கூட்டத்தாரல்லவா கிராமங்களை கசக்கிப் பிழிகின்றவர்கள். இதைவிட்டுவிட்டு இந்த சாதாரண வாத்தியார்கள் அதிலும் கஞ்சிக்குப் போதாத ஏழை வாத்தியார்கள் மாதம் 15 ரூபாய்க்கு தாளம் போடும் இந்த வாத்தியார்கள் கிராமத்திற்குப் போய் என்ன செய்ய முடியும் என்று கேட்கின்றேன்.

ஏதாவது நீங்கள் கிராமத்துக்குப்போய் செய்ய வேண்டுமானால் அவர்களுடைய பழமைப்பித்தை ஒழியுங்கள் மூடநம்பிக்கையை அகற்றுங்கள். அவர்களை பட்டணவாசிகள் எப்படி எப்படி ஏமாற்றுகிறார்கள் என்பதை எடுத்துக்காட்டி கண்விழிக்கச் செய்யுங்கள். தலைவிதியை மறக்கடித்து பகுத்தறிவை உண்டாக்குங்கள், அவர்களையெல்லாம் பட்டணங்களுக்கு குடிபோக விரட்டுங்கள். இவ்வளவு நீங்கள் செய்தால் அதுவே கிராம முன்னேற்றமான வேலையாகும். மற்றபடி நீங்கள் என்ன செய்தாலும் அது பயன்படாது. உங்களுக்கும் அதற்கு மேல் சக்தி இருக்காது. சௌகரியமும் சாதனமும் கிடையாது.

உதாரணமாக இராமநாதபுரம் ஜில்லாவில் ஒரு கிராமத்துக்குப் போயிருந்தேன். அங்கு மீட்டிங்குக்கு 400 பேர்கள் வந்திருந்தார்கள். அவர் களின் 375 பேர்களுக்கு நரம்புச் சிலந்தி நோய் இருந்தது. அந்த ஊர்க்கிணறு, கிணற்று தண்ணீர் மேலே வருவதைவிட மேலேயிருக்கும் தண்ணீர் கிணற்றுக்குள் சுலபத்தில் போகத் தகுந்த மாதிரியான மேயோ கிணறாகும். அதன் தண்ணீரை பரிசுத்தம் செய்ய யாருக்கும் புத்தி கிடையாது. உபாத்தியாயர் ஒருவர் இருந்தார். அவரும் காலில் கட்டுப்போட்டுக் கொண்டுதான் இருந்தார். நான் கேட்டதற்கு அவர் கவனிக்கிறதற்கு ஒருவருமில்லை நான் என்ன செய்ய முடியுமென்று பதில் சொன்னார். இவைகள் எல்லாம் அரசாங்கத்தை பொறுத்த வேலையே ஒழிய பொது ஜன சேவையால் ஆகக்கூடிய காரியமோ, ஒரு திண்ணைப் பள்ளிக்கூட வாத்தியாரால் ஆகக்கூடிய காரியமோ அல்ல. அரசாங்கத்தின் கையில் இருந்த பொறுப்பை ஜனத் தலைவர்கள் என்பவர்கள் பிடுங்கிக்கொண்டு தங்கள் சுயநலத்துக்கு பயன்படுத்திக் கொள்ளுகிறார்கள்.

இவைகள் மாற்றமடைய வேண்டுமானால் பகுத்தறிவை மக்களுக்கு போதியுங்கள் என்பதுதான் எனது ஆசை. பகுத்தறிவு விஷயத்திலும் நீங்கள் அடிமைப்பட்டிருக்கிறீர்கள். அது விஷயத்தில் உங்கள் அறிவுப்படி நீங்கள் போதிக்க முடியாது. உங்கள் அறிவுப்படி நீங்கள் நடக்கவும் முடியாது என்கின்ற நிலையில் நீங்கள் இருக்கிறீர்கள். ஒரு உபாத்தியாருக்கு மூன்று புத்தி இருக்கின்றன.

அதாவது அவருக்கு சரியென்று தோன்றும் ஆராய்ச்சி புத்தி ஒன்று. பிள்ளைகளுக்கு இன்னபடிதான் கற்பிக்கவேண்டும் என்று படிப்பித்த நிர்பந்த புத்தி இரண்டு. தனக்கு தோன்றுகிறபடியும் தான் படிப்பிக்கிறபடியும் நடக்க முடியாத பழமைப்பித்தும் கட்டுப்பாட்டு நிபந்தனையும் கொண்ட கோழைப் புத்தி மூன்று. இந்த மூன்று புத்திகளுடன் நீங்கள் கிராமங்களை புனருத்தாரணமோ சீர்திருத்தமோ செய்வதென்றால் அது பயப்படக்கூடிய காரியம் தான். ஆனாலும் பகுத்தறிவை பயன்படுத்த தைரியம் கொண்டு விட்டால் இந்த கஷ்டங்கள் சுலபத்தில் ஒழிந்துபோகும் என்றே நினைக்கிறேன்.

குறிப்பு: 23.07.1936 இல் லண்டன் மிஷன் காம்பௌண்ட் பள்ளிக்கூடத்தில் நடைபெற்ற ஈரோடு லண்டன் மிஷன் போதனா முறை பாடசாலை லிட்டரரி சொசைட்டியின் கூட்டத்தில் ஆற்றிய தலைமை உரை.

குடி அரசு சொற்பொழிவு 02.08.1936

வெள்ளி, 23 செப்டம்பர், 2011

ஆபாச பார்ப்பன இந்துமத பார்பனர்களின் காட்டுமிராண்டித்தன பாலியல் வன்கொடுமைகள்


ஆபாச பார்ப்பன இந்துமதத்தின் அடிப்படையே முழு ஆபாச அருவெருப்பு கதைகள்தான்.கோவிலில் இருக்கும் பெரும்பாலான சிலைகள் ஆபாசமானவை.ஆபாச கதைகளை படித்து விட்டு,ஆபாச சிலைகளை பார்த்துக்கொண்டிருக்கும் இந்த பார்ப்பன நாய்கள் இப்படித்தான் நடந்துகொள்ளும்.இவன்களுக்கு ''தட்சணை'' போடப்போட இப்படித்தான் கொழுத்துப்போய் நடந்துகொள்வார்கள்.இவனுக்கு தண்டனை தருவதை விட அந்த கோவிலை இடித்து தள்ளுவது தான் சரியான தீர்வு.பெரியார் சொல்லுகிறார்,''கொசுவை ஒழிக்கவேண்டுமானால் அது உற்பத்தியாகும் குட்டையை ஒழித்தால்தான் கொசு ஒழியும்''.

குடியாத்தம், செப்.23: குடியாத்தம் காளியம்மன்பட்டி ராஜிவ்நகரைச் சேர்ந்த ராஜா-அனிதா இணையரின் 5 வயது மகள் ராஜேஸ்வரியைக் கொலை செய்த குற்றத்துக்காக குமார் என்ற கோவில் குருக்கள் கைது செய்யப் பட்டுள்ளார்.

பாண்டியன் நகரில் உள்ள பள்ளியில் 1 ஆம் வகுப்பு படித்து வந்த ராஜேஸ்வரி 2 நாட்களுக்கு முன்பி லிருந்து காணாமல்போய்விட்டார். அவரது பெற்றோர் அவரை பல இடங்களில் தேடியும் எந்தத்தகவலும் கிடைக்கவில்லை.

இந்நிலையில் பள்ளிக்கு அருகில் 100 அடி தூரத்தில் உள்ள பாழடைந்த கிணற்றில் மஞ்சள் சாக்கு மூட்டையில் சிறுமி ராஜேஸ்வரியின் பிணம் கைப்பற்றப் பட்டது. சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு, கொலை செய்யப் பட்டுள்ளதாகத் தெரிய வந்தது.

காவல்துறை விசாரணை மேற் கொண்டபோது, அப்பகுதியைச் சேர்ந்த 45 வயதான குமார் என்ற கோவில் குருக்கள் தலைமறைவானது தெரிய வந்தது. அவரைப் பிடித்து காவல்துறையினர் விசாரித்தனர். சிறுமியைத் தான் கொலை செய்ததாக ஒப்புக் கொண்டு குமார் வாக்குமூலம் அளித்துள்ளார். சிறுமி ராஜேஸ்வரி பள்ளியில் இருந்து சிறுநீர் கழிக்க வெளியே வந்தபோது அவளுக்கு சாக்லேட் கொடுத்து பள்ளிக்கு அருகில் உள்ள தனது வீட்டுக்கு குமார் அழைத்துச் சென்று, சிறுமியிடம் தவறாக நடந்து கொள்ள முயன்றபோது சிறுமி கூச்சலிட்டுள்ளார். சிறுமி தன்னைப் பற்றி வெளியில் சொல்லிவிடுவாளோ என்ற அச்சத்தில் சிறுமியை அவள் வாயைப் பொத்தி, கழுத்தை நெரித்துக் கொன்றுள்ளார். பின்னர் சிறுமியின் பிணத்தை சாக்கு மூட்டையில் கட்டி பள்ளிக்கு அருகில் இருந்த பாழடைந்த கிணற்றில் போட்டு விட்டார்.